கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான ‘அப்யுதயா ’26’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி தொடக்கம்.
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் அகிலா முத்துராமலிங்கம் பேசுகையில், கே.பி.ஆர். மில் நிறுவனத்தின் ரூ.42 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சியை மாணவர்கள் சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். முதுநிலை மாணவர்களுக்கான ‘ஸ்ட்ரைடு’ திட்டம், திறன் மேம்பாடு மற்றும் சிறந்த வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார். தொடர்ந்து துறைத் தலைவர்களை அறிமுகப்படுத்தினார்.துவக்க நாளில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர் கே.டி. சீனிவாச ராஜா, நேர மேலாண்மை, மன உறுதி, இலக்கு நிர்ணயம், மதிப்புக் கூட்டுதல் மற்றும் தொழில்முனைவோர் சிந்தனையின் அவசியம் குறித்து பேசினார். மாணவர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும் வளர வேண்டும் என அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநர் பேராசிரியர் வி. பழனிமுத்து, ‘புதுமை தவிர்க்க முடியாதது’ என்ற தலைப்பில் பேசினார். மாணவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சி, நல்ல அணுகுமுறை, தனிநபர் உறவுத்திறன், ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் இன்குபேஷன் வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கும், மாணவர்களின் கல்விப் பயணம், மேலாண்மைத் திறன் வளர்ச்சி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டன.
தொடர்ந்து அடுத்த நான்கு நாட்களிலும், தொழில் மற்றும் மேலாண்மைத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தனிநபர் பிராண்டிங், பிராண்ட் மேலாண்மை, நிதி நிலைத்தன்மை, தொழில்முனைவோர் சிந்தனை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்