*35 ஆண்டுகால மருத்துவ சேவை: "அபிராமி நெக்ஸ்ட் கேர்" புதிய மைல்கல் திறப்பு விழா!**

கோயம்புத்தூரில் 1992-ல் சிறிய மருத்துவமனையாகத் தொடங்கப்பட்ட ஸ்ரீ அபிராமி மருத்துவமனை, இன்று அதிநவீன வசதிகளுடன் முன்னணி பல்துறை மருத்துவமனையாகப் பரிணமித்துள்ளது. இதன் 35 ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தில், மேம்படுத்தப்பட்ட மருத்துவ உள்கட்டமைப்பான **"அபிராமி நெக்ஸ்ட் கேர்"** திறப்பு விழா இன்று (18.07.2026) கோவையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் தமிழக அமைச்சர்கள் திரு. கே. விக்னேஷ் மற்றும் திரு. வி. சம்பத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, புதிய மருத்துவப் பிரிவுகளைத் திறந்து வைத்தனர். இதில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மையம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு, AI தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய சிகிச்சை மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டன.
மேலும், கல்வி குழும வளாகத்தில் புதிய நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையங்களும் திறந்து வைக்கப்பட்டன. ஸ்ரீ அபிராமி மருத்துவமனை மற்றும் கல்வி குழுமத் தலைவர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று, மருத்துவமனையின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைச் சிறப்பித்தனர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

பாரத மாதா நற்பணி அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு ஆண்டாள் பக்தர்கள் பேரவை கரம் கொடுத்தது

கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில், ஆதரவற்ற இல்லத்தில் உயிருக்கு போராடி வரும் முதியவரின் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி மற்றும் சக்‌ஷன் கருவி தேவைப்பட்டது.இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு ஆண்டாள் பக்தர்கள் பேரவை உடனடியாக கருவியை கொடுத்தது.இந்த நிகழ்வில் ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மாநில துணைத்தலைவர்கள் சக்திவேல் மற்றும் செந்தில் குமார், பாரத மாதா நற்பணிஅறக்கட்டளையின் நிறுவனர் Dr.M.கெளரி சங்கர், மற்றும் காப்பக நிர்வாகிகள் பிரின்ஸ், லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.



சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

*சூலூரில் அமைச்சர் என். ஆனந்த் பிறந்த நாளை ஒட்டி அன்னதானம்*

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என். ஆனந்த்  அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
சூலூர் சட்டமன்ற உறுப்பினர் NM.சுகுமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவுஅன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் கழகத் தலைமையின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

**சூலூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி: பொதுமக்கள் நெகிழ்ச்சி!**


சூலூர் காவல் நிலையம் பின்புறம் இயங்கி வரும் **'அருணாலயம் கல்வி அறக்கட்டளை மற்றும் கற்றல் மையம்'** நிறுவனர் திருமதி. அருணா முத்துக்குமார்ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, தெரபி மற்றும் ஏழை மக்களுக்கு மாதந்தோறும் மளிகைப் பொருட்களை வழங்கி பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த்அவர்கள் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அருணாலயம் மையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மற்றும் ஆட்டிசம் குழந்தைகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
சூலூர் காவல் நிலையத்தில் துவங்கிய இப்பேரணி தாலுக்கா அலுவலகம், நீதிமன்றம், யூனியன் அலுவலகம் வழியாக விழிப்புணர்வு முழக்கங்களுடன் சென்றது. சமூகப் பொறுப்புடன் களம் இறங்கிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இந்த வீதி உலா, சூலூர் பொதுமக்களிடையே பெரும் வியப்பையும் பாராட்டையும் பெற்றது.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

**தன்மயா கேர் ஆயுர்வேத கிளினிக்: முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம்!**

கோவை வடவள்ளியில் உள்ள ‘தன்மயா கேர் ஆயுர்வேத மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக்’ தனது முதலாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது.
நிறுவனர் மற்றும் சிஇஓ டாக்டர் கிருஷ்ணப்ரியா.கே தலைமையில் நடைபெற்ற விழாவில், புதிய **பிசியோதெரபி பிரிவு மற்றும் மருந்தகம்** திறந்து வைக்கப்பட்டது. மேலும், பொதுமக்களுக்காக **12 இலவச மருத்துவ முகாம்கள்** தொடங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பிரவீன் குமார் (பகுதி செயலாளர்), காவல் ஆய்வாளர் மற்றும் டாக்டர் வெங்கடாச்சலம் (முன்னாள் இயக்குநர், NLC) ஆகியோர் கலந்துகொண்டனர். ஆயுர்வேதம், பிசியோதெரபி மற்றும் மனநல ஆரோக்கியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
📍 **இடம்:** பாரதியார் பல்கலைக்கழகம் எதிரில், மருதமலை சாலை, வடவள்ளி.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

கோவையில் 8-வது தடகள சாம்பியன்ஷிப் போட்டி துவக்கம்!

மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் 8-வது ஜூனியர் மற்றும் சீனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் தொடங்கியது.
அகாடமி நிறுவனர் பரசுராம் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், மண்டல பி.எஃப். ஆணையர் பிரணவ், சன் ஸ்மார்ட் சரவணன், ரோட்டரி கிளப் தலைவர் திருப்பதி ஆகியோர் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பிரிவுகளில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அகாடமி நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்

*கோவை கேம்ஃபோர்டு பள்ளியில் 10 அடி உயர கால்பந்துடன் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு!**


FIFA உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு, கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் (Camford International School) போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. "இலக்குகளைத் தேர்ந்தெடுங்கள், போதைப்பொருட்களை அல்ல" என்ற கருப்பொருளில், மாணவர்கள் 10 அடி உயர பிரம்மாண்ட கால்பந்து அமைப்பை வடிவமைத்து, போட்டியில் பங்கேற்கும் 48 நாடுகளின் கொடிகளை ஏந்தி விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.
பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி அணிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த பிரம்மாண்ட கால்பந்து வடிவமைப்பு பள்ளி வளாகத்தில் இரண்டு நாட்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்