ஜெகன்நாத் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பிராப்பர்ட்டீஸ் சார்பில் மஹா ருத்ராபிஷேக பூஜை


ஆன்மீக உணர்வை மேம்படுத்தவும், பக்தி மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும், ஜெகன்நாத் டெக்ஸ்டைல்ஸ் & பிராப்பர்ட்டீஸ் வழங்கும், பரமசிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப் புனிதமான வேத யாகங்களில் ஒன்றான மகா ருத்ர அபிஷேக விழா மற்றும் ஒரு லட்சம் ருத்ர பாராயணம் கோயம்புத்தூர், ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் அமைந்துள்ள ராஜஸ்தானி சங்க வளாகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இந்த மாபெரும் ஆன்மீக நிகழ்ச்சி 20-ம் வருடமாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் மூலம் உலக அமைதி, வளமான வாழ்க்கை, ஆரோக்கியம் மற்றும் அனைவரின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று உள்ளனர்.இந்நிகழ்ச்சி, மதியம் 12.00 மணி முதல் பக்தர்கள் தாங்களே கலந்து கொண்டு அபிஷேகம் செய்யும் நிகழ்வுடன் தொடக்கியது. தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு மகா ருத்ர அபிஷேகம், மாலை 6.30 மணிக்கு மகா அலங்காரம், பின்னர் மாலை 7.00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
மகா ருத்ராபிஷேக விழாவில், சிவபெருமானுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.1008 லிட்டர் பசும்பால், 1008 தாமரைப் பூக்கள், 306 லிட்டர் தயிர், 108 இளநீர், 108 லிட்டர் கரும்புச் சாறு, 108 லிட்டர் பஞ்சாமிர்தம், 108 லிட்டர் பன்னீர், 108 லிட்டர் திருமஞ்சனம், 108 லிட்டர் சந்தனம், 108 லிட்டர் பழரசம், 108 கிலோ விபூதி, 18 கிலோ கரும்புச் சர்க்கரை, 18 கிலோ அரிசி மாவு, 18 லிட்டர் தேன் மற்றும் 18 லிட்டர் நெய் உள்ளிட்ட புனித திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும், மற்றும் அனைத்து இந்து நதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட புனித நீர்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.
மகா ருத்ர அபிஷேகம் என்பது வேத மரபில் மிகவும் சக்தி வாய்ந்த சிவ வழிபாடாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ ருத்ரம் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க நடைபெறும் இந்த அபிஷேகம், பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி, மன அமைதி, ஆரோக்கியம், ஆன்மீக முன்னேற்றம் மற்றும் இறையருளைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். இந்நிகழ்வின் மூலம் இளம் தலைமுறையினரிடையே ஆன்மீக பாரம்பரியத்தை வளர்த்தெடுப்பதோடு, இந்தியாவின் தொன்மையான வேத கலாச்சாரத்தையும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே முக்கிய நோக்கமாகும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெகன்நாத் டெக்ஸ்டைல்ஸ் & பிராப்பர்ட்டீஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், இந்த புனித நிகழ்வை இணைந்து நடத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருக்கும் வேத விற்பன்னர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து வழிபட தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனஎன்றனர்.இந்த ஆன்மீக விழாவில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு இறைவன் சிவபெருமான் மற்றும் அன்னை பார்வதி தேவியின் அருளைப் பெற்று அனைத்து பக்தர்களையும் ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அனுசரித்தனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்